Thursday 9 October 2014

ட்விட்டரில் அஜித் - விஜய் ரசிகர்களிடம் 'சிக்கிய' மனோபாலா..!


 ட்விட்டர் தளத்தில் அஜித், விஜய் ரசிகர்களிடையே இடையே நடக்கும் 'கெத்து'ப் போரில் சிக்கித் தவித்திருக்கிறார் நடிகர் மனோபாலா.

சமீபத்தில் நடிகர் அஜித்தை சந்தித்து விட்டு திரும்பி இருக்கிறார் நடிகர் மனோபாலா. ட்விட்டர் தளத்தில் எப்போதுமே தொடர்ச்சியாக கருத்துக்களை பகிர்ந்து வந்த மனோபாலா, அஜித்தின் சந்திப்பையும் பகிர்ந்தார்.

"இன்று அஜித்தை சந்தித்தேன். மிகவும் அமைதியான பணிவானவர், ஜெண்டில்மேன். எனது குடும்பத்தினர் பற்றி விசாரித்தார். ரொம்ப நாள் ஆயிடுச்சுல என்று கேட்டார். ஆமாம் நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. அவருடன் நடிக்க விரும்புகிறேன். பார்க்கலாம்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறினார்.

அவரது பதிவினைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள், "உங்கக்கூட போட்டோ எடுத்திருப்பாரே.. இப்போ நீங்க அந்தப் போட்டோவைப் போடுவீங்களே", "உங்க கிட்டயும் அவரபத்தி ட்விட்டர்ல ட்வீட் போட சொல்லி கேட்டு இருப்பாரே" என்று கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள். அதனைத் தொடர்ந்து அவரது ட்விட்டர் பக்கத்திற்குள் அஜித், விஜய் ரசிகர்களிடையே கருத்து மோதல்கள் தொடங்கின.

ரசிகர்களின் கருத்தைப் பார்த்த மனோபாலா, "அவர் சொல்லி நான் போடவில்லை. நானேதான் போடுகிறேன். உங்க ஆட்டத்திற்கு நான் வரவில்லை. விஜய் என் தம்பி. தயவுசெய்து பிரச்சினை ஆக்காதீர்கள்" என்று கூறினார். அதற்கு பிறகு அவருடைய ட்விட்டர் பக்கத்தில் எதுவுமே பதிவு செய்யவில்லை.

அஜித் ரசிகர் ஒருவர், அஜித் எப்படி இருக்கிறார் என்ற கேள்விக்கு, "ரொம்ப நல்லா இருக்கார்" என்று பதிலளித்துள்ளார். கால் ஆபரேஷன் குறித்து விசாரிக்கப்பட்டதற்கு, "ஷாலினி கர்ப்பமாக இருப்பதால், சிறிய காலத்திற்கு பிறகு செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்" என்றார் அவர்.
No comments

ஆபாச வீடியோ படத்தை காட்டி டாக்டரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய நடிகை கைது

டாக்டரிடம் ஆபாச வீடியோ படத்தை காட்டி ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய நடிகையை போலீசார் கைது செய்தனர். கைதான அந்த நடிகையின் பெயர் நயனா கிருஷ்ணா. கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் தனது தோழிகள் சிலருடன் 68 வயது டாக்டரிடம் பணம் பறிக்க திட்டமிட்டார்.

படுக்கையறையில் அவருடன் நெருக்கமாக இருக்கும் காட்சியை தந்திரமாக வீடியோவில் பதிவு செய்தார். பிறகு அந்த வீடியோ படத்தை டாக்டரிடம் காட்டி பிளாக்மெயில் செய்தார். ரூ.1 கோடி தர வேண்டும் என்றும் இல்லாவிட்டால் வீடியோ படத்தை வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டினார். இதனால் டாக்டர் அதிர்ச்சியானார்.

இது குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி நயனா கிருஷ்ணாவை தேடி வந்தனர். நயனா அவ்வப்போது இடத்தை மாற்றிக் கொண்டே இருந்தார். இதனால் அவரை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இரண்டு மாத தேடலுக்கு பிறகு நயனாவை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தார்கள்.

நயனா இது போல் மேலும் பலரிடம் பிளாக் மெயில் செய்து பணம் பறித்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். ஏமாந்தவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வருகிறார்கள்.
No comments

எந்த பக்கம் வாக்கிங் போனால் உடலுக்கு நல்லது..? - எச்சரிக்கை ரிப்போர்ட்..!

மைதானம், பூங்காக்களின், இடப்பக்கம், வாக்கிங் போனால் நல்லதெனவும், வலப்பக்கம் செல்வதே, உடலுக்கு ஆரோக்கியம் எனவும், நடைப்பயிற்சி செல்வோரிடம் இருவேறு கருத்துக்கள், நிலவி வருகின்றன. இடப்பக்கமோ, வலப்பக்கமோ, தினமும், வாக்கிங் போனாலே போதும்.

உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறையால், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், நீண்டகால நோய்களும் அதிகரித்து வருகின்றன. நடுத்தர வயதினரை மட்டுமின்றி, இளம் தலைமுறையையும் ஆட்டிப் படைக்கும் இந்நோய்கள் வராமல் தடுக்க, சிறந்த, எளிய வழி, வாக்கிங் எனப்படும் நடைப்பயிற்சி.

தினமும், வாக்கிங் செல்வதால், உடல் தசைகள் சுறுசுறுப்பு அடைகின்றன. தசைகளின் இயக்கத்திற்கு தேவைப்படும் குளுக்கோஸ், ரத்தத்தில் இருந்து, அவற்றுக்கு தொடர்ந்து கிடைப்பதன் மூலம், இன்சுலின் சுரப்பது சீராக்கப்பட்டு, நீரிழிவு நோய் வராமல் தடுக்கப்படுகிறது.

தினமும், குறைந்தபட்சம் ஒரு மைல் தூரம் நடக்கும்போது, உடல் ஆற்றலில், 200 கலோரிகள் செலவிடப்படுகின்றன. இதனால், உடல் உயரம் மற்றும் வயதிற்கேற்ப, உடல் எடை பராமரிக்கப்பட்டு, உடல் பருமன் பிரச்சனை, உயர் ரத்த அழுத்த நோய் ஆகியவை தவிர்க்கப்படுகிறது.

உடலில், கொழுப்பு குறைவதால், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பும் குறைகிறது. நடைப் பயிற்சியில், மனம் ஒருமுகப்படுவதால், மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவை குறைந்து, மன நோய்கள் வருவதற்கான வாய்ப்பும் வெகுவாக குறைகிறது. வாக்கிங் செல்வதால், மூளைக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைத்து, ஞாபக சக்தி கூடுகிறது.

நடைப்பயிற்சியால் உடல் எலும்புகள் வலுவடைவதால், மூட்டு தேய்மானம், எலும்பு மெலிதல் போன்ற நோய்கள் வருவதில்லை. எலும்புகளின் வலிமைக்கு தேவைப்படும் கால்சியம் சத்தை, நாம் உண்ணும் உணவில் இருந்து பெற்று, உடலுக்கு தர தேவையான, வைட்டமின் டி நடைப்பயிற்சியின்போது, நம் மீது விழும் சூரிய ஒளி மூலம் நமக்கு கிடைக்கிறது.

பெண்களுக்கு வரும் பேறுகால நீரிழிவு நோய், மார்பக புற்றுநோய், மலட்டுத் தன்மை மற்றும் பெருங்குடல் புற்றுநோய், ஆண்மைக் குறைவு ஆகியவற்றை, நடைப்பயிற்சி வராமல் தடுப்பதாக, ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. ஒரு மணி நேரத்திற்கு, 6 கி.மீ., வேகத்தில், கை, கால்களை வீசியப்படி, நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம், 25 நிமிடம் வீதம், வாரத்திற்கு, 150 நிமிடங்கள், வாக்கிங் போக வேண்டும். நடைப்பயிற்சியின்போது, இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்த்து, உடல் வியர்வையை வெளியேற்றும் தன்மை கொண்ட தளர்வான ஆடைகளை அணிய வேண்டும். செருப்பு, ஷூ என, வயது மற்றும் விருப்பத்திற்கேற்ப, காலணிகளை அணியலாம்.
No comments

ஒட்டிய கன்னங்கள் அழகாக மாற பயிற்சிகள் இதை செய்து பாருங்க..!


உங்களுடைய அழகை அதிகரித்து காட்டுவதில் முகம், கன்னம் முக்கிய பங்கை வகிக்கிறது. ஒரு சிலர் பார்க்க அழகாக இருந்தாலும் அவர்களுடைய கன்னம் ஒட்டி போய் களையிழந்து அவர்களது அழகை பாதியாக குறைத்து விடும்.

இவர்களுக்கு என்று வீட்டில் செய்யக்கூடிய எளிய பயிற்சிகள் உள்ளன. இதை தினமும் தொடர்ந்து 2 மாதம் செய்து வந்தால் உங்கள் கன்னங்கள் அழகாக கவர்ச்சியாக காட்சியளிக்கும். இப்போது இந்த பயிற்சி செய்முறையை பார்க்கலாம்.

1. முதலில் ஒரு சேரில் அமர்ந்து கொள்ளுங்கள். அமைதியாக அமர்ந்த நிலையில் உங்கள் உதடுகளை மூடிக்கொள்ளுங்கள். பிறகு இரு கன்னங்களையும் உறிஞ்சுவதைப்போல் கன்ன சதையை உள்பக்கமாக இழுங்கள். அதன் பின் இழுத்த கன்னங்களை விடுவிக்க வேண்டும்.  முதலில் ஒரு பக்கம் செய்து பின்னர் அடுத்த பக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு 15 முறை செய்த பின்னர் சில விநாடிகள் ஓய்வு எடுத்து இரு கன்னங்களுக்கும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டும். அதே 15 முறை செய்ய வேண்டும்.

2. உங்களுடைய வாயில் எவ்வளவு காற்றை நிரப்பிக் கொண்டு மூட முடியுமோ அவ்வளவு காற்றை நிரப்பி கொள்ளுங்கள்.  சில நிமிடங்கள் காற்று வெளிவராதவாறு மேல் உதடைக்கொண்டு மூடவும். பிறகு வாயை மூடியவாறே இடது மற்றும் வலது பக்கம் கன்னங்களுக்கு காற்றை நகர்த்தவும். இவ்வாறு 15 முதல் 20 முறை செய்ய வேண்டும்.

3. உங்கள் உதடுகளை மூடவும். பிறகு உங்களுடைய கன்னங்களின் சதையைக் கொண்டு உதடுகளை சுருக்கவும். அதன்பின் சுறுக்கிய உதடுகளை சில நிமிடங்களுக்கு பிறகு விட்டுவிடவேண்டும். இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும்.

- இந்த பயிற்சிகளை காலையில் செய்தால் தான் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். முதல் பயிற்சியை நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்யலாம்.
No comments

உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சிகள்..! - இதோ உங்களுக்காக..


உடல் எடையை குறைக்க பல பயிற்சிகள் இருந்தாலும் சில பயிற்சிகள் விரைவில் நல்ல பலனைத் தரக்கூடியவை. அதுவும் இந்த பயிற்சிகளை ஜிம்முக்கு சென்று தான் பயிற்சி செய்ய வேண்டும் என்பதில்லை. வீட்டில் இருந்த படியே இந்த பயிற்சிகளை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

1. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் நேராக நின்று கொள்ளவும். பின்னர் நாற்காலியில் உட்காருவதை போல் கால்முட்டியை பாதிவரை மடித்த நிலையில் இருக்கவும். அடுத்து வலது காலில் மேல் வலது கையை ஊன்றி இடது காலை பக்கவாட்டில் நீட்டியபடி படத்தில் உள்ளபடி வலது பக்கமாக சாயவும்.

இந்த நிலையில் சில விநாடிகள் இருந்த பின்னர் கால்களை மாற்றி வலது பக்கம் செய்யவும். இவ்வாறு ஆரம்பத்தில் 15 முறையும் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 30 முறை செய்யலாம்.

2. இந்த பயிற்சி அனைவருக்கும் தெரிந்தது. விரிப்பில் கைகளை தரையில் ஊன்றி கால்களை நேராக நீட்டவும். பின்னர் தரையில் தலை படாமல் படத்தில் உள்ளபடி எத்தனை முறை குனிந்து நிமிர முடியுமோ அத்தனை முறை செய்யலாம். இந்த பயிற்சி தொப்பை குறைய செய்யும் முக்கிய பயிற்சியாகும்.

3. விரிப்பில் மல்லாந்து படுத்து கொண்டு கைகளால் தலையை தாங்கி கொள் வேண்டும். கால்களை முட்டிவரை மடக்கி  கொள்ள வேண்டும். இப்போது வலது கை கையால் இடது காலையும், இடது கையால் வலது காலையும் மாறி மாறி தொட வேண்டும்.

இவ்வாறு ஆரம்பத்தில் 15 முறையும் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 30 முறை செய்யலாம். இந்த பயிற்சி வயிற்று பகுதி சதையை குறைய செய்யப்படும் பயிற்சியாகும்.
No comments

தன்னையே திருமணம் செய்து கொண்ட பெண்..!


திருமணம் என்றால் ஆண், பெண் என 2 பேர் தேவை. பல்வேறு நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டு உள்ள ஓரினச்சேர்க்கை திருமணத்துக்கு கூட 2 பேர் தேவை. ஆனால் இந்த திருமணங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில், இங்கிலாந்தில் வசிக்கும் பெண் ஒருவர் தன்னைத்தானே திருமணம் செய்து புரட்சி செய்துள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்த கிரேஸ் ஹெல்டர் என்ற புகைப்பட நிபுணர்தான் இவ்வாறு திருமணம் செய்தவர். இந்த திருமண விழாவையும் அவர், வழக்கமான ஒரு திருமணத்தைப்போல ஆடம்பரமாக நடத்தினார். அதன்படி தனக்குத்தானே மோதிரம் அணிவித்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் சுமார் 50 பேர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கிராபரான இவருக்கு வேறு ஒரு ஆணுடனோ, அல்லது பெண்ணுடனோ திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என்ற எண்ணம் இல்லை. எனவே, கடந்த 6 ஆண்டுகளாக தனக்கு தானே காதலை வளர்த்துக் கொண்டார்.இந்த நிலையில் அவர் லண்டனில் உள்ள ஒரு பூங்காவில் தனியாக அமர்ந்து கொண்டு தனது திருமணத்தை அறிவித்தார். அதை தொடர்ந்து திருமணத்துக்கு தேவையான மணப்பெண் உடை மற்றும் மோதிரம் வாங்கினார்.

அதன் பின்னர் டேவன் என்ற இடத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என 50 பேரை சமீபத்தில் அழைத்தார்.அவர்களுக்கு தடபுடலாக திருமண விருந்து கொடுத்தார். பின்னர் கண்ணாடி முன்பு நின்று கொண்டு மோதிரத்தை அணிவித்து திருமணம் செய்து கொண்டார்.அதன் பிறகு கண்ணாடியில் தோன்றிய தனது உருவத்துக்கு அவரே முத்தம் கொடுத்து அன்பை பறிமாறி கொண்டார்.
No comments