Thursday, 9 October 2014

தன்னையே திருமணம் செய்து கொண்ட பெண்..!

09:18

Share it Please

திருமணம் என்றால் ஆண், பெண் என 2 பேர் தேவை. பல்வேறு நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டு உள்ள ஓரினச்சேர்க்கை திருமணத்துக்கு கூட 2 பேர் தேவை. ஆனால் இந்த திருமணங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில், இங்கிலாந்தில் வசிக்கும் பெண் ஒருவர் தன்னைத்தானே திருமணம் செய்து புரட்சி செய்துள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்த கிரேஸ் ஹெல்டர் என்ற புகைப்பட நிபுணர்தான் இவ்வாறு திருமணம் செய்தவர். இந்த திருமண விழாவையும் அவர், வழக்கமான ஒரு திருமணத்தைப்போல ஆடம்பரமாக நடத்தினார். அதன்படி தனக்குத்தானே மோதிரம் அணிவித்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் சுமார் 50 பேர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கிராபரான இவருக்கு வேறு ஒரு ஆணுடனோ, அல்லது பெண்ணுடனோ திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என்ற எண்ணம் இல்லை. எனவே, கடந்த 6 ஆண்டுகளாக தனக்கு தானே காதலை வளர்த்துக் கொண்டார்.இந்த நிலையில் அவர் லண்டனில் உள்ள ஒரு பூங்காவில் தனியாக அமர்ந்து கொண்டு தனது திருமணத்தை அறிவித்தார். அதை தொடர்ந்து திருமணத்துக்கு தேவையான மணப்பெண் உடை மற்றும் மோதிரம் வாங்கினார்.

அதன் பின்னர் டேவன் என்ற இடத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என 50 பேரை சமீபத்தில் அழைத்தார்.அவர்களுக்கு தடபுடலாக திருமண விருந்து கொடுத்தார். பின்னர் கண்ணாடி முன்பு நின்று கொண்டு மோதிரத்தை அணிவித்து திருமணம் செய்து கொண்டார்.அதன் பிறகு கண்ணாடியில் தோன்றிய தனது உருவத்துக்கு அவரே முத்தம் கொடுத்து அன்பை பறிமாறி கொண்டார்.

0 comments:

Post a Comment