Thursday 9 October 2014

ஆபாச வீடியோ படத்தை காட்டி டாக்டரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய நடிகை கைது

13:47

Share it Please
டாக்டரிடம் ஆபாச வீடியோ படத்தை காட்டி ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய நடிகையை போலீசார் கைது செய்தனர். கைதான அந்த நடிகையின் பெயர் நயனா கிருஷ்ணா. கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் தனது தோழிகள் சிலருடன் 68 வயது டாக்டரிடம் பணம் பறிக்க திட்டமிட்டார்.

படுக்கையறையில் அவருடன் நெருக்கமாக இருக்கும் காட்சியை தந்திரமாக வீடியோவில் பதிவு செய்தார். பிறகு அந்த வீடியோ படத்தை டாக்டரிடம் காட்டி பிளாக்மெயில் செய்தார். ரூ.1 கோடி தர வேண்டும் என்றும் இல்லாவிட்டால் வீடியோ படத்தை வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டினார். இதனால் டாக்டர் அதிர்ச்சியானார்.

இது குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி நயனா கிருஷ்ணாவை தேடி வந்தனர். நயனா அவ்வப்போது இடத்தை மாற்றிக் கொண்டே இருந்தார். இதனால் அவரை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இரண்டு மாத தேடலுக்கு பிறகு நயனாவை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தார்கள்.

நயனா இது போல் மேலும் பலரிடம் பிளாக் மெயில் செய்து பணம் பறித்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். ஏமாந்தவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வருகிறார்கள்.

0 comments:

Post a Comment